07 மார்ச் 2012

நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள்?

அடிக்கடி நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது.

கைநிறைய சம்பளம், வாரத்திற்கு இரண்டுநாள் விடுமுறை என கால் சென்டர் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. இளைய தலைமுறையினர் பலரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிய உடன் கால் சென்டர்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். மாலையில் வீட்டை விட்டு கிளம்பி விடிய விடிய வேலை பார்த்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும் இளம் பெண்கள் அதிகரித்துவிட்டது. இவர்கள் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் உடல் நிறைய நோயை வாங்கிக் கொள்கின்றனர் என்பது அதிர்ச்சி கரமான உண்மை.

காலை நேரத்திலும், ரெகுலர் ஷிப்ட் முறையிலும் வேலை பார்ப்பவர்களை விட முறையற்ற இரவு நேர பணிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 20 சதவிகிதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் 10 முதல் 19 ஆண்டுகள் இரவு பணி புரிபவர்களுக்கு 40 சதவிகிதமும், 20 ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேர ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு 58 சதவிகிதம் வரை டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஹெஎஸ்பிஹெச் சின் ஆசிரியர் ஆன் பான், வருடக்கணக்கில் முறையற்ற இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை

வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.


அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.

அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.‌

மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.

முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.
மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம். அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.

கர்ப்பிணிகள் இரும்பு சத்து மாத்திரைகள் பாவித்தால் பாதிப்பும் அதிகமாம்.....

இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.

பெண்களுக்கு இரும்பு சத்து

பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

நச்சாகும் இரும்பு சத்து

சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

காய்கறிகள் கீரைகள்

சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.

முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது

காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை ஏற்படும் மாற்றங் களை மருத்துவ ரீதியாக பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பெண்களின் உடலியல் ரீதியாக மெனார்க்கே (Menarche) வில் தொடங்கி. மெனோபாஸ் (Menopause)வரை ஏற்படும் மாற்றங்கள் இயற்கை வழங்கியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாராலும் மறுக்க இயலாது. மெனோர்கேயையும், மெனோபாசை யும் மருத்துவத்தால் உண்டாக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் இதன் இடைபட்ட காலத்தில் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும்.

இந்த காலகட்டத்தில் தான் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட் ரோன், இன்சுலின், வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் ஆகியவை சுரக் கின்றன. இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக் கிறார்கள். 

இதன் விளைவாக எலும்புகளின் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சி, தசைகளின் வளர்ச்சி, இதயத்திற்கான சீரான இரத்த ஓட்டம் ஆகியவை சாத்தியப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் போது அதாவது மெனோபாஸ் ஏற்படும்போது, இந்த ஹார்மோன்கள் தங்களின் சுரப்பை குறைத்துகொள்வதால் சமச்சீரற்ற தன்மை ஏற்படு கிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், பிறப்பு உறுப்புகளில் வெள்ளைப்படுதல், இரத்தம் கசிதல், எலும்பு தேய்மானம், இருதய கோளாறு, இரத்த சோகை, புற்று நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை எப்படி உணர்ந்து கொள்ளலாம்?

தலைவலி, முகம் சிவத்தல், உடல் வலி, மல சிக்கல், எடை திடீரென்று அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், தூக்கமின்மை, பசியின்மை, மன அழுத்தம், மன நிலையில் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்போது மாதவிடாய் நிறுத்தத்தை உணர்ந்து கொள்ளலாம். மாதவிடாய் தள்ளிப்போகுதல், ரத்த போக்கு, இரத்த சோகை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மெனோபாஸ் உறுதிசெய்யப்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதால் தான் புற்று நோய் வருகிறது என்கிற நம்பிக்கை சரிதானா?

பெரும்பாலான ஆய்வின் முடிவில் இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்தின் போது, வயதின் காரணத் தினாலும், ஈஸ்ட்ரோஜன் என்கிற சுரப்பியின் சமச்சீரற்ற தன்மை யினாலும் பெண்களுக்கு மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகி றது. இதனை சி ஏ 125 போன்ற நவீன பரிசோதனை மூலமும் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம்.

மெனோர்க்கே மற்றும் மெனோபாஸ் ஆகிய இரு நிலைக்களுக்கிடையே நிகழும் முக்கிய நிகழ்வு கருமுட்டை உற்பத்தி. இதனை செயற்கையாக உருவாக்க இயலுமா?

இயலாது. ஆனால் கரு முட்டையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்குரிய சிகிச்சை மூலம் குறைபாட்டை களைந்து, கரு வை உற்பத்தி செய்தற்குரிய தகுதியான முட்டையாக உருவாக்கலாம்.

மெனோபாசிற்கு பிறகு பெண்கள் உள்ளாகும் மனநோய்க்கு உளவியல் ரீதியாக தீர்வு காண்பது நல்ல பலனைத் தருமா? அல்லது மருத்துவத்துடன் கூடிய சிகிச்சை மூலம் பலன் பெறுவது நலமா?

இதற்கான மருந்துகளும், மாத்திரைகளும் தற்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இருப்பினும் மெனோபாசிற்கு பிறகு அவர்களுக்குரிய கவுன்சிலிங் வழங்குவதன் மூலமே முழுமையான தீர்வை காண இயலும்

காலங்கடந்து அதாவது மெனோபாஸ் ஆனபிறகு தன்னால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா?

மெனோபாஸ் ஆகிவிட்டது என்றால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அந்த பெண் சற்று முன்கூட்டியே சிந்தித்திருந்தால் அவரது கரு முட்டை யை, அதற்குரிய வங்கி மூலம் சேமித்து வைத்திருந்தால் சாத்தியப்பட்டிருக்கும்.

தகவல்: திண்டுக்கல் ஹில்லாக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் மீனா

05 பிப்ரவரி 2012

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.



சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.



சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?

உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.

அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை

அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்

குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.

பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்

மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்

பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.

விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்

விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி

விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி

விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்

விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு

விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்

விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை

விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)

விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்

விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை

விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி

சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.

தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?

திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.

சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.

உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.



சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது

சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:

கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .

கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).

ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..



டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

தொடர்பு உடையவை :

100 மருத்துவ குறிப்புக்கள் : http://www.facebook.com/photo.php?fbid=142642792497675


Natural Pain Cures From Your Kitchen :http://www.facebook.com/media/set/?set=a.155035977925023.32140.100002558656409


Respect women : http://www.facebook.com/photo.php?fbid=119397771488844

26 ஜனவரி 2012

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்


குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தைவளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடையகுழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடிகுழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.

குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்


பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்


6 முதல் 12 வாரங்கள்
  • குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
  • பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
  • குழந்தை திடீரென அழுகும்


3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
  • மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
  • குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
  • குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
  • அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.


6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
  • குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
  • தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
  • குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
  • எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
  • தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
  • குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
  • குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.


9 மாதங்கள்
  • கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
  • குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
  • அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.


12 மாதங்கள்
  • குழந்தை எழுந்து நிற்கும்
  • தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
  • வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
  • பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.


18 மாதங்கள்
  • யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை,கப்பை பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
  • கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
  • ஓரிரு வார்த்தைகளை பேசப்பழகிவிடும்.
  • குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
  • உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.


2 வருடங்கள்
  • கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
  • கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
  • புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
  • தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
  • பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
  • உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.


3 வருடங்கள்
  • தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
  • சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
  • பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
  • குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
  • மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கும்.


4 வருடங்கள்
  • மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
  • புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
  • உறவினர்களிதம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்


5 வருடங்கள்
  • துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
  • குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
  • படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
  • குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
  • வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.

25 ஜனவரி 2012

நபி மருத்துவத்தில் பழவகைகள்

நோய் தீர்க்கும் திராட்சை
பழங்களிலே மிகவும் சிறந்த பழங்கள் திராட்சைபழம்,அத்திப்பழம், பேரிச்சம்பழம் ஆகிய மூன்று பழங்கள் என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்.திராட்சைபழத்தை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் என அபுநயீம் அவர்கள் தமது மருத்துவ நூலில் கூறுகிறார்.
ஹளரத் இப்னு அப்பாஸ் "பழத்தை உண்ணுங்கள் அதன் கோட்டையை வீசி எரிந்து விடுங்கள்" ஏனெனில் திராட்சைப்பழம் நோய் நிவாரணியாகும்,அதன் கோட்டை நோயாகும் ,என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக திப்பநபவி அறிவிக்கிறது.நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பழச்சாறு விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்.
இன்று சுவிட்சர்லாந்து .ஐரோப்பிய நாட்கள்,இந்தியா இங்கெல்லாம் பழச்சாறு அருந்தும் முறை{juice- Therapy} பிரபலமடைந்து வருகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்புதான் டாக்டர் லேம்ப் {Lambe} என்பவர் இங்கிலாந்தில் முதல் முறையாக திராட்சை பழச்சாறு மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தார்.
திராட்சை பழத்தில் மட்டும் 300 வகை இருப்பதாக சொல்கிறார்கள்.இந்தியாவில் கிடைப்பவை பன்னீர் திராட்சை,கோட்டை இல்லாத திராட்சை,ஆஸ்திரேலியா திராட்சை,பச்சை திராட்சை,ஐதராபாத் திராட்சை ,ஆங்கூர் திராட்சை ஆகும்.
அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள் பச்சை திராட்சை ஒரு அவுன்ஸ் பகல் சாப்பாட்டுக்கு பின்பு சாப்பிட்டு வர 21 நாளில் தலைவலி குணமாகும்.இதே அளவு ஜூஸ் காலை உணவுக்குப்பின் சாப்பிட இதய வீக்கம் குறையும்.ஐந்து நாட்கள் சாப்பிட்டால் வாய்,நாக்கு புண் குணமாகும்.
சிலருக்கு மனதில் இனம் புரியாத :திகில்" பயம் ஏற்ப்படும்.இதையம் படபடக்கும்.கைகால் நடுங்கும்.இவர்கள் பகல் உணவுக்குபின் திராட்சை சாறு ஒரு அவுன்ஸ் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தைரியம் ,சுறுசுறுப்பு உண்டாகிவிடும்.
குழந்தைகளுக்கு ஏற்ப்படும் மலச்சிக்கல் தீர திராட்சை ஜூஸ் இரண்டு டீஸ்பூன் அளவு காலை மாலை மூன்று நாள் கொடுத்தால் மலச்சிக்கல் மறைந்து விடும்.
பெண்களுக்கு ஏற்ப்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கு தீர தினம் ஒரு அவுன்ஸ் திராட்சை ஜூஸ் காலை மாலை இருவேளை ஒரு மாதம் குடித்தால் சீராகும்.
புற்று நோயை குனபடுத்திய திராட்சை ஜூஸ்:{Grape Care For Cancer}
திராட்சை பழச்சாறு பற்றிய மகிமையை பார்த்தோம். இதன் மருத்துவ மகிமைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளன.திராட்சை பழச்சாறு புற்று நோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
திருமதி ஜானாபிரண்டிட் {Johanna brandit} என்பவர் பல வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.திராட்சை பழச்சாறு சாப்பிட்டதால் குணமடைந்திருக்கிறார் என்ற செய்தி நிரூபிக்கப் பட்டுள்ளது.
அவரின் இளமைக்காலத்தில் திடீர் என கடுமையான வயிற்று வழியால் பாதிக்கப் பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார் ஒன்றும் பலனலிக்கவில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்டபின் அவருக்கு வயிற்றில் புற்று நோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை ,ரேடியோ கதிர் சிகிச்சை செய்ய சொன்னார்கள்.. இவாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு ஒரு நோயாளியை இவர் பார்த்ததால் அந்த சிகிச்சை தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டார். பின்பு நோன்பு மருத்துவம் பற்றி {அப்டன்சின்கிளிஎர் {Uptonsinclair} எழுதிய நூலைப்படித்து அதன்படி செய்து பார்த்தார்,பலன் இல்லை.மீண்டும் 9 வருடங்கள் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கட்டி இரண்டாக வளைந்திருந்தது.இந்தமுறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேசன் செய்ய மறுத்தார்.
பின்பு அவர் திராட்சை பழச்சாறு மட்டும் அருந்தி நோன்பிருந்து வந்தார். என்ன ஆச்சரியம் அவருடைய வயிற்றில் உள்ள வலி ஒரு வாரத்தில் மறைந்து ஆறு வாரத்திற்குள் கட்டிகள் அமுக்கப் பட்டிருந்தது.பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தலில் கட்டிகள் ஏதும் காணப் படாததால் டாக்டர்கள் இதை நம்ப மறுத்தனர். பின்பு நம்பினார்.
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த திராட்சை சிகிச்சை பழச்சாறு வெற்றி அளித்தது.இவருடைய உண்மை நிகழ்ச்சியை "நோய் தீர்க்கும் திராட்சை"என்று எழுதி வெளியிட்டனர்.பல பதிப்புகள் வந்து விற்பனையாகியது.
திராட்சை ஜூஸ் பற்றி மேலும் விபரம் அறிய விரும்புபவர்கள் இந்தியாவில் பூனாவில் உள்ள உருளிகான்சான்{Urulikanchan} இயற்க்கை மருத்துவ மையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதி இதனைப் பற்றிய தகவல் பெறலாம்..இங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு திராட்சை பழச்சாறு மருத்துவம் தினமும் அளிக்கப் படுகிறது.
திருக்குர்ஆன் சொன்ன பழச்சாறு மருத்துவத்தை இன்று நோய் நோய் தீர்க்க மருத்துவ ரீதியாக நிரூபித்து வருகிறார்கள். பழச்சாறு அருந்துவதன் மூலம் அனேக நோய்களிடமிருந்து விடுதலை அடியலாம்.நோய்கள் வராமலும் ,உடல் ஆரோக்கிய வழியில் பாதுகாத்துக் கொள்ளலாம் என நிரூபிக்கப் பட்டுள்ளது.....எனவே நாமும் நம் வாழ்வில் நம் திருக்குர்ஆன் கூறியது போன்று ஜூஸ் அருந்தி நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்து..எந்த விதமான கொடிய நோய்கள் ஆபத்துக்களை விட்டும் பாது காத்து கொள்வோமாக.. வள நாயனும் துணை புரிவானாக ஆமீன்.....