18 செப்டம்பர் 2014

நினைவாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத கைமருந்துகள்:

1. 10 பாதம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிடவேண்டும், காலையில் என்றால் 4-5 உட்கொள்ளலாம்.
2. வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பிஞ்சு வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம்.
3. ஒரு கப் எலுமிச்சை சாறில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
4. வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்து சட்னி போல் சாப்பிடலாம்.
5. தினமும் 5 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
6. கல்யாணப் பூசணி சாறு 100, 1 சிட்டிகை ஏலக்காய் போடி சேர்த்து தினமும் 1 கப் சாப்பிடலாம்.
7. 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை மாலை சாப்பிடலாம்.
௮.சிற்றமிர்து என்ற சிந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மிலி குடிக்கலாம்.
9. உணவில் சிறிது தேனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரச்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.
10. தலைக்குப் பலா அச்வகந்தாலாஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
11. அஸ்வகந்தா சூரணத்தை 10கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.
12. 3கிராம் மஞ்சள் போடி, 5 கிராம் இஞ்சி போடி, லவங்கப்பட்டை 3-5- கிராம், 20 மிலி கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.
13. புதினா கீரையைத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
14. தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மிலி சாப்பிடலாம்.
15. தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.
16. பாலுடன் சங்குப் பூவின் வேர் 3 கிராம் சேர்த்து சாப்பிடுவது நல்லது.