18 டிசம்பர் 2016

பட்டினி ஓர் அற்புத மருத்துவம்

உபவாசம் எனும் அருமருந்து :- 

நோய்க்கான காரணங்கள் அறிந்தால் நோய் வராமல் தடுக்கவும் நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் இயலும். 
முழுக்க முழுக்க நோய்க்கான காரணகர்த்தா யாரென்றால் நோயாளி அல்லது நோயாளியின் மேல் அக்கறை உள்ளவர்களே ஆவார்கள். 
மற்றபடி நோய்க்கான காரணங்களை வெளியே தேடுவது அறியாமை மட்டுமே ஆகும். 
கிருமிகளால் நோய் வருகிறது எனில் ஏன் கிருமிகளால் மற்றவர்கள் பாதிப்படைய வில்லை ?.
உணவில் இரசாயனம் எனில் ஏன் அதை உண்ட எல்லோருக்கும் நோய்கள் வருவதில்லை ?.
சுற்றுச் சூழல் காரணம் எனில் ஏன் எல்லோருக்கும் நோய்கள் வந்திருக்க வேண்டும் அல்லவா?. 
யாராவது உங்கள் நோய்க்கான காரணங்களை வெளிக்காரணிகள் மேல் சுமத்தினால் அவர் உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்று பொருள். 
நீங்கள் உங்கள் உடலில் நோய்கள் தங்குவதற்காக இடமளித்து உள்ளீர்கள் என்பதே பொருள். 
தினசரி மூன்று வேளை நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற முட்டாள்தனம்தான் நோய்க்கான மூல காரணம். நேரத்திற்கு சாப்பிடாமல் அல்சர் வந்து விட்டது என்பது அபத்தமானது. 
எந்த உயிரினமும் நம்மைப் போன்று கீழ்த்தரமான உணவுப் பழக்கத்தை கொண்டிருக்க வில்லை. 
இலையுதிர் காலத்தில் மரங்கள் உணவை குறைத்துக் கொள்கிறது. வறட்சி காலங்களில் தாவர உண்ணிகள் குறைந்த அளவே உண்கிறது. மாமிச உண்ணிகளும் உணவின்றி இருக்கும் காலம் உண்டு. 
ஆனால் மனிதன் மட்டுமே ஆயுள் முழுக்க உணவை குறைப்பதே இல்லை. உணவினாலேயே நோய்வாய்ப்பட்டு இறக்கிறான். 
விலங்குகள் பறவைகள் போன்று உணவைக் குறைத்துண்ணும் காலங்கள் மனிதனுக்கு இல்லையோ அதேபோல் தேவையான உடலுழைப்பும் இல்லாமல் போய்விட்டது. 
நமது உயிர் அறிவியல் பற்றி பார்ப்போம். உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களை நம்மாள் சேமித்து வைக்க இயலும். சுமார் 90 நாட்கள் நம்மாள் உணவின்றி உயிர் வாழ இயலும். காரணம் அந்த அளவிற்கு உணவுச் சத்துக்களை சேமித்து வைத்துள்ளோம். உயிர் வாழும் காலம் ஆளாளுக்கு மாறுபடும். 
ஆனால் கழிவுகளை அவ்வாறு சேமித்து வைக்க இயலாது. உடலிலிருந்து அப்பப்போதைக்கு வெளியேற்ற வேண்டும். சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க இயலும். அவ்வாறு கழிவுகள் வெளியேறாவிடில் அதுவே நோய்க்கான மூல காரணம் ஆகும். 
ஏன் கழிவுகள் வெளியேறாமல் உடலில் தேங்குகிறது ? .
கழிவுகள் வெளியேற தேவையான சக்தி பற்றாக்குறை காரணமாக கழிவுகள் உடலில் தேங்கி நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. 
இதோ நமக்கு நோய்க்கான காரணங்கள் தெரிந்து விட்டது. இனி நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அறிவோம். 
கழிவுகளை வெளியேற்ற உயிர் சக்தி சேமிக்கப்பட்டு கழிவுநீக்க சக்தியாக செயல்பட வேண்டும். 
எவ்வாறு சக்தியை சேமித்து கழிவுகளை வெளியேற்றுவது ?. 
சத்துக்கள் தேவைக்காகவே உணவை உண்கிறோம். உணவிலிருந்து செரிமானம் மூலம் சத்துக்களை பிரித்தெடுக்கும் போது சக்தி செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே பார்த்தோம், சத்துக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று. பின் எதற்காக நோயுள்ள காலத்தில் சக்தியை வீணடித்து உணவை உண்ண வேண்டும் ?. 
நமக்கு உண்ணச் சொல்லி பசியை கொடுப்பதும் நமது உயிரே. அதேபோல் உண்ணாமல் இருக்க பசியின்மையை கொடுப்பதும் நம் உயிரே ஆகும். 
நமது உயிரையே சித்தர்கள் இறை என்று போற்றினர். தெள்ளத் தெளிந்தோர்க்கு ஜீவனே சிவலிங்கம். உயிரை இயற்கை என்றாலும் சரி இறைவன் என்றாலும் சரி . 
நீங்கள் பசியின்மையை உணராது அலட்சியம் செய்யும் ஒவ்வொரு முறையும் உயிரின் செயல்பாட்டை இயற்கையை இறைவனை அலட்சியம் செய்கிறீர்கள். நோய் குணமாவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் இழக்கிறீர்கள். 
உடலில் காய்ச்சல் இருந்தால் பசியின்மை இருக்கும். பசியின்றி உணவை கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்வது இயற்கைக்கு எதிரான செயல்பாடு ஆகும். அது மருத்துவம் என்றாலும் பசியின்மையை அலட்சியம் செய்தால் அம்மருத்துவம் இயற்கைக்கு எதிரான மருத்துவம் ஆகும். காய்ச்சல் வந்ததற்கான காரணம் சரி ஆகாமல் மீண்டும் மீண்டும் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டே இருக்கும். 
உயிர்காக்க வேண்டியே காய்ச்சல் ஏற்படும். ஆனால் காய்ச்சல் வந்து உயிர் போய் விட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 
டெங்கு காய்ச்சலின் போது பசியின்மையை அலட்சியம் செய்து உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் மரணம் ஏற்பட்டது. 
தடுப்பூசி போட்ட குழந்தைகளின் காய்ச்சலை மதியாமல் மருந்துகளையும் உணவையும் கொடுத்ததாலேயே மரணம் நடந்தது. இது மறைக்கப்பட்ட உண்மைகள். 
உடலில் எந்த வலிகள் இருந்தாலும் பசியின்மை இருக்கும். அப்போது உணவை எடுத்துக் கொள்ள கூடாது. 
தூக்கத்தில் இருக்கும்போது சாப்பிடாத போதும் பசியின்மை இருக்கும். எனவே தூங்குபவரை எழுப்பி உணவை கொடுக்கக் கூடாது. 
இன்னும் பல சந்தர்ப்பங்களில் பசியின்மை வரும். அந்த நேரத்தில் எக்காரணம் கொண்டும் உணவை உண்ண கூடாது. 
சிலர் பசியின்மையையே நோயாக சொல்வர். அது நோய் அல்ல. அது பாதுகாப்புணர்வு. அவ்வாறு பசியில்லாமல் இருக்கும் போது உண்ணாமல் இருக்க வேண்டும். அதுவே தீர்வு. 
உபவாச முறைகள் நிறைய உண்டு. எளிதான முறை நன்கு பசிக்கும்வரை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இது மற்ற உபவாச முறைகளை விட அனைவருக்கும் எப்போதும் ஏற்றது. பசியின்மை ஒரு மாதம் கூட இருக்கும். அது கழிவுகளைப் பொருத்து. 
பசியின்மையை அலட்சியம் செய்து உயிர் காக்க எடுக்கும் முயற்சிகள் மரணித்திற்கான அஸ்திவாரம் ஆகும். 
இயற்கை மருத்துவத்தின் ஒரு அற்புதமான சிகிச்சை முறைகளில் உபவாசமும் ஒன்று. 
எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் நோயின் தன்மையை பொருத்து அதிகபட்ச நிவாரணத்தை கொடுக்கவல்லது இயற்கை மருத்துவம். 
அறிவியல் பூர்வமான இயற்கை மருத்துவம். ஆனால் அடிப்படை உயிரறிவியலுக்கு எதிரான முட்டாள்தனமான ஆங்கில மருத்துவத்தை தூக்கிப் பிடித்து மரணத்தை தழுவுகிறோம். 
மிகக் குறைந்த செலவில் நிவாரணத்தை கொடுக்க வல்லது இயற்கை மருத்துவம். 
நோய் வராமல் காக்கும் வழிமுறைகள் கற்றுக் கொடுப்பதும் இயற்கை மருத்துவம். 
ஆனால் நமது பாரம்பரிய இம்மருத்துவத்தின் அருமை தெரியாமல் இயற்கைக்கு எதிரான மருத்துவத்தை கொண்டாடி வருகிறோம்.

நன்றி: ஜோதி பாலாஜி முகநூல் பக்கம்

26 செப்டம்பர் 2016

கொலஸ்ட்ரால் பற்றிய முக்கிய கேள்விகள்

உங்கள் total cholesterol எவ்வளவு இருக்கிறது?
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemsitry), Coimbatore
150க்கு கீழே இருந்தால், என்ன ஆகும்?
தற்கொலை உணர்ச்சி தூண்டப்படும், இறப்பு சீக்கிரம் வரும், கேன்சர் வரும். 

உங்கள் Triglyceride அளவு அதிகமாக இருந்து, உங்கள் Total cholesterolலும் அதே அளவு அல்லது அதற்கு மேலும் அதிகரித்திருந்தால், உங்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கலாம். அதாவது உங்களுக்கு வருங்காலத்தில் சர்க்கரை வியாதி, இதய பிரச்சினை வரலாம்.
When your Triglycerides level are high and your total cholesterol levels are equally high or more, You may have Metabolic syndrome (a precursor of Diabetes and Heart Disease).

உடம்புக்கு கொலஸ்டிரால் தேவையா?
கொலஸ்ட்ரால் நமது மூளையின் செயல்பாட்டிற்கும், மூளையின் வளர்ச்சிக்கும் கூட இன்றியமையாதது.
கொலஸ்ட்ரால், செல்களுக்கு தோலை (Cell membrane) உருவாக்கி, செல்களை நீர்புகா வண்ணம் வைக்கிறது. இதன் காரணமாக செல்களின் உள்ளேயும், வெளியேயும் வேறுவேறு வேதியியல் (நிகழ்வுகளை) மாற்றங்களை அனுமதிக்கிறது.
நரம்பியக்கடத்திகளை (neurotransmitters) சமனப்படுத்துவதன் மூலம் நமது மனநிலையின் அளவுகளை சீராக்குகிறது.
அத்துடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் இல்லாமல் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், (Estrogen) ப்ரோஜெஸ்டிரோன், (Progesterone), ப்ரெக்நேனோலோன்,(Pregnenolone) களை உடலால் உற்பத்தி செய்ய முடியாது.
டெஸ்டோஸ்டிரோன், (Testosterone) அட்ரினலின்,(Adrenalin) கார்டிசால்,(Cortisol) மற்றும் DHEA ( dehydroepiandrosterone) அல்லது வைட்டமின் D போன்ற ஸ்டீராய்ட் ஹார்மோன்கள் கொலஸ்டிரால் இல்லாமல் நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது.

உணவில் கொலஸ்டிரால் கம்மியாக எடுத்தால் என்னாகும்?
முட்டை, கறி என நாம் உண்ணும் உணவில் கொலஸ்டிரால் தேவையான அளவில் உள்ளது. கொலஸ்டிரால் உணவு வேண்டாம் என இவற்றை ஒதுக்கினால், நமது உடல் பஞ்சத்தில் இருக்கும் ஒருவனைப் போல் கொலஸ்டிராலுக்காக ஏங்குகிறது.
அதனால் நமது ஈரல் தூண்டி விடப்பட்டு HMG-CoA Reductase என்னும் புரதம் அதிகளவில் உருவாகி, நாம் சாப்பிடும் கார்ப் எனப்படும் மாவுச்சத்தில் இருந்து தேவையை விட அதிகளவு கொலஸ்டிரால் உற்பத்தியை செய்யப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாகிறது.
அப்புறம் டாக்டரிடம் போய், "நான் கொழுப்பே சாப்பிடறுதில்ல, எப்படி கொலஸ்டிரால் ஏறுச்சு?" எனக் கேட்கக் கூடாது.

கொலஸ்டிராலை மருந்து மூலம் குறைத்தால் என்னாகும்?
உங்களுக்கு இதில் எதாவது இருக்கிறதா?
1. டிப்ரெஷன் எனப்படும் மனச்சோர்வு.
2. மனக்குழப்பம்
3. ஞாபக மறதி
4. ஒரு செயலில் காண்சென்ரேட் பண்ண முடியாமை.
5. அம்னீசியா
6. குறைந்த எதிர்ப்பு சக்தி
7. கான்சர் வருவதற்கான ரிஸ்க் அதிகரித்தல்
8. மூச்சிரைப்பு
9. லிவர் பிரச்சினைகள்
10. சோர்வு
11. CoQ எனும் முக்கிய பொருள் குறைந்து இதய வியாதி வருதல்
12. உடலுறவின் மேல் விருப்பம் இல்லாமை.
13. உடலுறவு செய்ய முடியாமை
14. கிட்னி பாதிப்பு
15. நரம்பு வலி
16. தசை சோர்வு
17. சர்க்கரை வியாதி
18. இறப்பு
இவை கொலஸ்டிராலை குறைக்கும் ஸ்டாடின் (Atorvastatin, rosuvastatin) மருத்துகளின் பக்க விளைவுகள். 

உணவில் கொலஸ்டிரால் தேவையா?
ஒரு நாளைக்கு நம் உடல் இரண்டு கிராம் (2000mg- எட்டு முட்டை மஞ்சள் கருவிற்கு சமம்) கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. கொலஸ்டிரால் இல்லாமல் பல ஹார்மோன்கள் நமக்கு உற்பத்தியாகாது.
உடலுக்கு இவ்வளவு கொலஸ்டிரால் உற்பத்தி திறன் இருந்தாலும், நம் உடலுக்கு உணவின் மூலமும் கொலஸ்டிரால் தேவைப் படுகிறது.
நம் செல்கள் (முக்கியமாக ஈரல்) கொலஸ்டிராலை மிகவும் கஷ்டப்பட்டு ஒரு 30 steps உள்ள ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் வழியாக உற்பத்தி செய்கிறது. நாம் கொலஸ்டிரால் உள்ள உணவுகளை சாப்பிட்டால் நமது ஈரல் செல்களுக்கு கொஞ்சமாவது ரெஸ்ட் கிடைக்கும்.
சாப்பாட்டில் கிடைக்கும் கொலஸ்டிரால் எவ்வளவு முக்கியம் என்றால், நம் உடல் நாம் உணவின் மூலம் எடுக்கும் கொலஸ்டிராலை 90% வரை உள்ளிழுத்துக் கொள்கிறது (உணவில் உள்ள இரும்பு, கால்சியம் எல்லாம் வெறும் 10-30% மட்டுமே உள்ளிழுக்கப் படுகிறது).
நம் உடலின் வடிவமைப்பை உற்று நோக்குங்கள். கொலஸ்டிராலை இவ்வளவு வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்ளும் உடலுக்கு எப்படி கொலஸ்டிரால் எதிரியாவான்?

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.
கொலஸ்டிரால் பற்றி ஒரு புரிதல் ஏற்பட, என் முந்தைய போஸ்டுகளை பார்க்கவும்.
அதிக கொலஸ்டிரால் ஆபத்தா? No its a Myth.
பெண்களிடமும் வயதானவர்களிடமும் ஆராய்ந்து பார்த்த போது, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகம் இருப்பவர்களின் வாழ்வுகாலம், நார்மல் அல்லது கொலஸ்டிரால் கம்மியாக இருப்பவர்களை விட அதிகம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வயதானவர்களிடம் எடுக்கப்பட்ட இன்னொரு ஆய்வில், கொலஸ்டிரால் கம்மியாக இருப்பவர்களுக்கு, கொலஸ்டிரால் அதிகம் இருப்பவர்களை விட இரண்டு மடங்கு மாரடைப்பு வந்துள்ளது.
கொலஸ்டிரால் அதிகமானால் வாழ்வு அதிகரிக்கும், குறைந்தால் மாரடைப்பு வரும்.
Hulley et al. 1992; Forette et al. 1989
Krumholz et al. 1990
கொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி?
LDL கொலஸ்டிரால் உடம்பில் உள்ள முப்பது டிரில்லியன் செல்களுக்கும் சில விட்டமின்களை கொண்டு சேர்ப்பதுடன், அந்த செல்களின் சுவர் பலப்பட கொலஸ்ட்ராலை தருகிறது. மற்றும் பல ஹார்மோன்கள் உருவாக, கொலஸ்டிராலையும் கொண்டு சேர்க்கிறது.
இந்த கொலஸ்டிராலை கெடுத்தால் (ஆக்சிடைஸ்) செய்தால் அது Oxidized LDL (Ox LDL) ஆகி விடும். இந்த ox LDL நேராக இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கும்.
உடலுக்கு அதிக நன்மை செய்யும் LDLலை, OxLDL எனப்படும் விஷமாக மாற்றுவது எப்படி?
1. பிராசஸ் செய்யப்பட்டு கொழுப்பை குறைத்த பாக்கெட் பால் (Low fat milk-4%, 2%, etc.,) மற்றும் பால் பவுடர் சாப்பிடுவதன் மூலம் Ox LDL உடலில் அதிகமாகிறது.
2. எந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்தினாலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக Ox LDL கிடைக்கிறது (பொரிப்பது-பூரி, போண்டா போல் எண்ணையில் போட்டு எடுக்கும் அனைத்தும்)
3. அளவிற்கு அதிகமான சூட்டில் சமையல் செய்தல் Ox LDL அளவை அதிகப்படுத்தும்
4. முறையான உணவை சாப்பிட்டாலும் உடலில் இன்பலமேஷன் எனப்படும் உள்காயம் இருந்தால் LDLஐ Ox LDL ஆக மாற்றும்.
பின் குறிப்பு: ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளால் Ox LDL எனப்படும் உயிர்கொல்லி கொலஸ்டிராலை குறைக்க முடியாது. நல்லது செய்யும் சாதா LDLஐ மட்டுமே குறைக்க முடியும்.
கொலஸ்டிரால் அதிகமானால் மாரடைப்பு வருமா?
ஹார்ட் அட்டாக் வந்த 50-75% மக்களுக்கு கொலஸ்டிரால் அளவு நார்மலாகவே இருக்கிறது.
ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவதால் தான் மாரடைப்பு வரும் என இதுவரை ஒரு ஆராய்ச்சியால் கூட அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. அதே போல் உணவில் கொலஸ்டிரால் அதிகம் எடுத்தால் ஹார்ட் அட்டாக் வரும் என அறுதியிட்டு இதுவரை ஒரு ஆராய்ச்சி கூட நிருபித்ததில்லை.
ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவது என்பது ஒரு வியாதி அல்ல. அது ஒரு அறிகுறி. ரத்தக் குழாய்களில் எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை சரிப்படுத்த கொலஸ்டிரால் செல்கிறது.
கொலஸ்டிரால் அதிகமானால், உடலில் இன்பலமேஷன் எனும் உள்காயம் அதிகமாக இருப்பதாக பொருள். உள்காயத்தை சரிப்படுத்தாமல் ஸ்டாடின் மூலம் கொலஸ்டிராலை குறைப்பது, திருடனைப் பார்த்து நாய் குரைத்தால், திருடனைப் பிடிப்பதை விட்டு விட்டு, நாயை அடிப்பது போலாகும்.
நாய் இனிமேல் குறைக்காது, திருடன் எல்லாவற்றையும் (ஆரோக்கியத்தை) திருடிச் சென்று விடுவான்.

கொலஸ்டிரால் உள்ள உணவை சாப்பிடலாமா?

அமெரிக்க விவசாயத்துறை (USDA) 1970 களில், பெருகி வரும் இதய வியாதிக்கு என்ன காரணம் என கண்டுப்பிடிக்க முடியாமல், உணவில் அதிக கொலஸ்டிரால் எடுப்பதாலேயே இதய பிரச்சினை வருகிறது என்று கூறியது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கமிட்டி கூடி அமெரிக்க மக்கள் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பர் என இவர்கள் அறிவுறுத்துவார்கள். 1970ல் 300mg அளவே ஒருவர் உணவில் கொலஸ்டிரால் எடுக்க வேண்டும் எனக் கூறினார். (ஒரு முட்டை மஞ்சள் அளவு)
அமெரிக்கர்களை அப்படியே அச்சுக் காப்பி அடிக்கும் நாமும் உணவில் கொலஸ்டிராலை குறைத்தோம். உடலில் உற்பத்தியாகும் கொலஸ்டிராலை ஸ்டாடின் விஷம் கொடுத்து குறைத்தோம்.
2015ல் ஒரு வழியாக அவர்கள் "உணவில் இருக்கும் கொலஸ்டிராலுக்கும் இதய வியாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உணவில் கொலஸ்டிரால் எடுக்கலாம். வெண்ணையும் முட்டையும் எடுப்பதால் ஒரு தவறும் இல்லை" எனக் கூறினர். 45 வருடங்கள் உலகில் ஏற்பட்ட இதய சாவுகளில் இவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இனியாவது விழித்துக் கொள்வோம். முட்டையும், வெண்ணையும் உணவில் சேர்த்து உயிரைக் காப்போம். (தினமும் 1000mg வரை கொலஸ்டிரால் எடுப்பது மிக நல்லது-நான்கு முட்டை அளவு)
இது சம்பந்தமாக TIME மேகசின் என்ன சொன்னது?
TIME-1984-"கொலஸ்டிரால் கெட்டது"
TIME-2014-"மன்னிக்க. கொலஸ்டிரால் நல்லது"
டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை.
ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.
இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது.

01 ஜூன் 2016

மன அழுத்தமா?

மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்

குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்

மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க

மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.

01 மே 2016

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!

பொதுவாகவே, மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு.
இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும். அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும். தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும். கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின், பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கோழி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலின் மிக நுண்ணியத் துளைகள் கெட்டு, உடல்நலக் கெடுதல் உண்டாகலாம்.

03 ஏப்ரல் 2016

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

20 மார்ச் 2016

பாதாம் பருப்பு " சிறப்புகள் " ..

🔰
 " நல்லதா, கெட்டதா ? ?
🔰" பாதாம் பருப்பு சாப்பிடலாமா, கூடாதா எனக் குழம்ப வைக்கிற ஒரு சில உணவுகளில் பாதாமும் ஒன்று. உண்மைதான் என்ன ? ?
🔰 " பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட்செய்கிறவர்களுக்கும, கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்..
🔰 " ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது..
🔰 " 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது ! ! !
🔰 " இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம்..
🔰 " அதெப்படி ? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள் ?’ என்பதுதானே உங்கள் சந்தேகம் ?
🔰 " ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். .
🔰 " இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. .
🔰 " சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம்..
🔰 " நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.
🔰 " அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம். பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. .
🔰 " புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்...
🔰 " நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். .
🔰முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது..
🔰 " அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு ..
🔰 " பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும்..
🔰 " ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும். .
🔰 " பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும்..
🔰 " பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். .
🔰 " அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்..

25 பிப்ரவரி 2016

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு எளிமையானத் தீர்வு


எலுமிச்சை அதிசயம்


எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்  (Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க


இந்த சுவையான பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும். வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து பிட்டாக இருக்க பலன்தெரியும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.
தேவையானவை:
சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 1 பல்
பொதினா அல்லது பார்ஸ்லி - 1 கைப்பிடி
தண்ணீர் - அரை கிளாஸ்
அவகேடோ - அரைப் பழம்
செய்முறை:
அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பலன் காணும் வரை அருந்தவும்.


24 பிப்ரவரி 2016

இயற்கை மருத்துவம்

1. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
5. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
6. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
7. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
9. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
10. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது

16 பிப்ரவரி 2016

கூந்தல் பற்றிய பிரச்சனைகள்


கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.
எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். * கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
* ஸ்கால்ப் பிரச்சனை:
வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். * பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.

15 பிப்ரவரி 2016

4448 நோய்களும் குணமாகும் சித்தர்கள் முறை

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதன முறை விளக்கம் (4448 நோய்களும் குணமாக‌):
இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.
சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.
அவற்றின் இயல்பு வருமாறு;
பிருதிவி பூதம் - மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
வாயு பூதம் - அநாகதம்
ஆகாய பூதம் - விசுத்தி
மனம் - ஆக்ஞா
இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும்.
இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.
இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும்.
இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;
நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே
இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.
இதனை எப்படி பயிற்சிப்பது?
அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,
கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
"எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது"
இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.

08 பிப்ரவரி 2016

இஞ்சிப்பால்

இரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்சிப்பால்
இஞ்சிப்பால்உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.
தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார். மருத்துவ நன்மைகள்
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை குணமடையும்.
3. வாயுத் தொல்லை என்பது வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
5. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
6. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த இஞ்சிப்பாலை அருந்தலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
7. தொப்பை வயிற்றுக்காரர்கள் இந்த இஞ்சிப்பாலை தொடர்ந்து குடித்து வந்தால் படிப்படியாக விரைவில் தொப்பையை குறைத்துவிடலாம்.