26 ஆகஸ்ட் 2011

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும
தகவல் J.காலித்
.

இரத்தக் கொதிப்பு

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடுவளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

இரத்தக் கொதிப்பு நோய்

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை இரு வகைகளாக பிரிக்கலாம். உடலியல் தொடர்பான பிணிகள் மற்றும் மனோதத்துவ ரீதியிலான பிணிகள் என்று. ஒரு சில நோய்கள் மனமும் உடலும் சார்ந்த பிணி எனப்படுகிறது. இந்த நோய்க்கான மருத்துவத்தில் ஒரு நல்ல அம்சம் - இதை பூரணமாகக் குணப்படுத்தி விடலாம் என்பதே. மன எழுச்சிகளும், பதற்றமும், கவலையும் உடலில் பிரதிபலித்து பிணியாக உருவாகி விடுகிறது.

‘பிளட் பிரஷர்’ எனும் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) நமது உடலில் 24 மணி நேரமும் இயங்கும் இதயம் மற்றும் அதன் இரத்த ஓட்டம் தொடர்பானதாகும். உடலுக்குள் எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும். இரத்தம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில், அழுத்தத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தது, மருத்துவ ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி ஹார்லியின் கண்டுபிடிப்பு ஆகும்.

இயற்கையான இரத்த அழுத்தம் அதிகப்படும் போதுதான் அது நோயாகிறது. அதனால் பல தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்திற்கும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்தக் குழாய்களும் தான் இருதயத்தின் சீரான நிலைக்கு முக்கியமாகும். இருதயம் சுருங்கி இரத்தத்தைப் பம்ப் செய்யும் பொழுது இரத்த அழுத்தம் கூடுதலாகவும், இருதயம் விரிந்த நிலைக்குத் திரும்பும்போது இரத்த அழுத்தம் குறைவாகவும் கணக்கிடப்படுகிறது. இருதய துடிப்பிற்கேற்ப இரத்த அழுத்தம் ஒவ்வொரு கணமும் நம் உடலுக்குள் மாறி மாறி நிலவுகிறது.

இவ்வாறு இயல்பாகவே சீரான இரத்த அழுத்தம் நிலவுவதால் தான் உடல் முழுவதும் இரத்தம் ஓடி தன் பணியைச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் என்பது ஓர் இயற்கையான உடல் ரீதியான செயல். இப்படி சீராக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது இரத்த அழுத்தம் எனப்படுகிறது. ஒருவர் உடம்பில் பெரும்பாலும் அதிகமான இரத்த அழுத்தமே இருந்து கொண்டு வருமானால் அது ஒரு வியாதியாக மாறி ‘ஹை பிளட் பிரசர்’ எனப்படுகிறது. நம் சுவாசத்தில், சாதாரண மூச்சு, மூச்சுத் திணறல், இரைக்க இரைக்க மூச்சு வாங்குதல் என்னும் மூன்று நிலைகளுக்கு ஏற்ப, சாதாரண இரத்த அழுத்தம், குறைவான இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம் என்று மூன்று நிலைகள் உள்ளன. இந்நோயின் தன்மை, இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிவகைகள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கை மருத்துவத்தில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்தக் கொதிப்பில் உள்ள உயர் மற்றும் குறைந்த அழுத்தத்திற்கு கீழ்க்காணும் வகையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SAFI BLOOD PURIFIER 200 ML BOTTLE - The Herbal Remedy

நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து அதற்கான இயற்கை மருந்துகளை வயது, இரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கண்டறிந்து மற்றும் பிற உடல் பாதிப்புகளையும் கேட்டு, உணவு முறைகளை மாற்றியும், உடலுக்குப் போதுமான ஓய்வு மற்றும் தேகப்பயிற்சியான தினமும் நடைப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தவிர எம்மிடமுள்ள இயற்கை மூலிகை மருந்து வகைகள் நோயின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவக் குறிப்புகளாக நமக்கு அவ்வப்போது ஏற்படும் பல்வேறு சாதாரண நோய்களையும் அதற்கான நிவாரணம் அளிக்கக்கூடிய எளிய வழிவகைகளையும் ஒரு பட்டியல் தொகுப்பாக கீழ்க்காணும் முறையில் தந்திருக்கிறேன். எனவே இதை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் உடனடி கையேடாக உபயோகிக்கவும், அவசர சிகிச்சையை வீட்டிலிருந்தே பெரும் வகையில் அமைத்துக் கொள்ளவும் பயன்படும் என நம்புகிறேன். எந்தவித நோய்க்கும் அடிப்படைக் காரணமாக அமைவது நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், சுற்றுப்புற சுகாதாரம், தவறான பழக்க வழக்கங்களை தவிர்த்தல், போதுமான உடல் ஓய்வு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் மனதில் இறுக்கம் ஏற்படாத வாழ்க்கை போன்றவைதான்.

இவை யாவும் கவனத்தில் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை அமைந்துவிட்டால், மன நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று நோயின்றி வாழ முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சரி, இனி நமக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் அதற்கான இயற்கை மருத்துவ முறையில் உள்ள சிகிச்சையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

திடீர் காய்ச்சல் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டால் இஞ்சியுடன் மிளகையும் சேர்த்து நசுக்கி நீரில் கொதிக்க காய்ச்சி வடிகட்டி சோயா பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். சிறிது சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி சாதாரணமாய் ஏற்படும் தலைவலிக்கு சுக்கு கைகண்ட மருந்தாகும். கொஞ்சம் சுக்கை எடுத்து நீரிட்டு மை போல் அரைத்து நெற்றியல் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். வாந்தி பேதி நிற்க வாந்தி பேதி, மந்த பேதி ஏற்பட்டு தொல்லை தருமாயின் ஒரு சட்டியில் இரண்டு மிளகாயைச் சேர்த்து கருகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அந்த வறுத்த சட்டியில் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி, அந்நீரை ஒரு வேளை உள்ளுக்கு சாப்பிட்டால் போதும், வாந்தி நின்று விடும்.

பித்தத்துக்கு பித்த நோய்க்கு சீரகம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். 50 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுச் சீரகம் கறுப்பு நிறம் ஆகும் வரை நன்றாகச் காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயைத தலைக்குத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் தணியும். எண்ணெய் ஸ்நானம் செய்யும் அன்று மட்டும் தயிர், மோர் தவிர்க்க வேண்டும்.

அடுத்து கருவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும், துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து உண்பது ஆகியவையும் பித்தம் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும். பித்த அதிகரிப்பால் தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை ஏற்படும்போது, கொத்தமல்லி எனும் தனியாவை, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் உடைத்துப் போட்டு, அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து அந்நீரை இறுத்து வடிகட்டி சிறிது சர்க்கரையும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட பூரண குணம் ஏற்படும். அதுபோன்றே தேங்காய்ப் பால் வாய்ப்புண், நெஞ்சுப்புண், வயிற்றுப்புண் ஆகியவனவற்றினை குணம் அடையச் செய்வதோடு பித்தத்தையும் தவிர்க்கும். வாய்ப்புண்ணிற்கு கொப்பரை தேங்காயை மென்று தின்றால் கூட நிவாரணம் கிடைக்கும்.

உடல் சூடு தணிய திராட்சைப்பழம், சாத்துக்குடி, இளநீர், அருகம்புல் சாறு மற்றும் நெல்லிக்காய் போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும். அன்றாடம் மோர் அருந்துவது (முக்கியமாக கோடை காலங்களில்) மாதுளம், வெள்ளரிப்பழம், பேயம் பழம், தர்பூசணி போன்றவையும் உடற்சூட்டையும் தாகத்தையும் போக்கக்கூடியதாகும்.

மதுவின் மயக்கம் தீர அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி மயக்கமடைந்திருப்பவருக்கு மாதுளம் பழத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொடுத்தால் போதும் மயக்கம் தெளியும். சிலர் எலுமிச்சம் பழத்தைக் கூட இவ்வாறு பிழிந்து சாறு எடுத்து அருந்தச் செய்வார்கள். சில சமயம் அது வாந்தி ஏற்பட வைக்கும். பல்வலி நீங்க பொதுவாக அனைவருக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாக பாதுகாக்காததே. பல்நோய் உள்ள போது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும். ஈறுகளில் வீக்கம் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை தடவினால் வீக்கமும் குறையும். அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

மேலும் சில மருத்துவக் குறிப்புகள் இரத்தக் கொதிப்பிற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணி.

இருமலுக்கு வசம்பு.

எந்த வகை உணவையும் அளவிற்கு அதிகமாக உட்கொண்டாலும் அதற்கு மேலே நாலு பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும். செரிமானம் ஆகிவிடும்.

வெந்நீரில் குளியல் காலிலிருந்தும், குளிர்நீர்க் குளியல் தலையிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

கண்களுக்கு நலம் தருபவை பொன்னாங்கண்ணி கீரை.

பற்கள் பாதுகாப்பிற்கு கரிசலாங்கண்ணிக் கீரை.

வயிற்று உபாதைகளுக்கு வாழைப்பழம்.

இதயத்திற்கு மீன் எண்ணெய், பூண்டு.

தோல் மினுமினுப்பிற்கு தேன்.

இளநரைக்கு பாதாம்பருப்பு.

கொழுப்பைக் குறைக்க வெங்காயம்.

நரம்பு தளர்ச்சிக்கு சோயா.

நடுங்கும் கைகளுக்கு மாம்பழச்சாறு.

குடல் நலத்திற்கு புதினா கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி.

உடல் சூட்டைத் தணிக்க இளநீர், அருகம்புல் சாறு, லெமன் ஜூஸ்.

ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலைமையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் வியாதி வராமல் தடுக்கவும், வியாதி வந்தபின் தீர்க்கவும் இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகள், கனிவகைகள், எண்ணற்ற மூலிகை வகைகள் மற்றம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, அன்றாடம் உண்ணும் உணவு வகைகளின் முக்கியத்துவம். நல்ல பழக்க வழக்கங்கள், நடைப்பயிற்சி, தியானம், பொழுதுபோக்கு போன்றனவற்றைச் சார்ந்தே ஒவ்வொருவரின் ஆரோக்கியம் சீராக அமைய முடியும் என்பதே இயற்கை தந்துள்ள உண்மையான அடிப்படையாகும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இரத்தக் கொதிப்பு

பயனுள்ள மருத்தவக் குறிப்புகள்; தளங்களின் தொடர்புகள்

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

தேனும் ஒரு மருந்துதான்

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?.
மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும்
உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும்.
இயற்கை மருத்துவம்
அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு
இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம்
உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு உண்டாக்கும் விடயம் இது.
விடயம் இனிப்பானது, மிக இனிப்பான தேன் பற்றியது. தேன் போசாக்குள்ள
பதார்த்தம். அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது
என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என
நம்புகிறோம்.
ஆனால் இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. அதற்கு மேலாக
ஏதாவது ஆராய்சிகளால் நிறுவப்பட்ட, விஞ்ஞானபூர்வமான மருத்துவ
குணங்கள் தேனுக்கு உள்ளதா?
விஞ்ஞான பூர்வ தகவல்கள்
காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் ஏற்ற சிறப்பான மருந்து இதுவென
ஆய்வுகள் கூறுகின்றன.
தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.
ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.
புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய
ஆராக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.
புண் குணமாகியதும் விரைவில் ஆராக்கியமான தோல் மேவி வளர்வதற்கு
உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.
புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?
தேன் எவ்வாறு குணமாக்குகிறது
புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத்
தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.
2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid)
உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து
சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது
அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்
பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.
3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.
புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை
சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய
படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின.
ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன்
இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும்
கூறின.
எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமை
-ப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் மேல் இடும் தேனின் அளவு
உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான
கருத்தாகும்.
தேனினால் சுத்தமும் செய்யலாம்
பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் சுத்தம் செய்த பின்பு தேனை
இட்டுக் கட்டுவார்கள். மாறாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின்
அதனையே இட்டு மருந்து கட்டலாம்.
நெருப்புச் சுட்ட புண்கள்
நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர்,
கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்டும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத்
தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.
வாய்ப் புண்கள்
வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச்
சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற
தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை
இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது
என சில ஆய்வுகள் கூறுகின்றன.
20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics)
கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்.
பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில்
வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.
தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன?
சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க
வேண்டிய தேவை எதுவும் இல்லை.
மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று.
ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத்
தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும்
புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப்
பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.
தேனின் போஷனை
ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே
உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக
எமக்குக் கிடைக்கிறது.
மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.
கொழுப்புச்சத்து, கொலஸடரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும்
((fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம்
மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால்
விரைவில் ஜீரணமடையும்
தன்மை கொண்டது.
பக்கவிளைவுகள்
தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை
(Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ
பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும்
அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை
“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே”
என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய
தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து
விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித
உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை
ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு
து ஒரு ஆதாரம்.
அது சரி. சுத்தமான தேன் எங்கே கிடைக்கிறது. எனக்கும் கொஞ்சம்
சொல்லுங்களேன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஸஜ்தா செய்தல் (சிரம் பணிதலும் வலி களைதலும்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வபரக்காத்துஹு
சிரம் பணிதலும் வலி களைதலும்

நமது உடல் ஒவ்வொரு நாளும் மிக ஏராளமான மின்காந்த அலைகளை (Electromagnetic Waves) பெற்றுக் கொள்கிறது. எங்களது பாவணையிலிருந்து தவிர்க்க முடியாத பல்வேறுபட்ட மின் உபகரணங்களிலிருந்து இந்த மின்காந்த அலைகளைப் பெற்றுக் கொள்கிறோம். உதாரணமாக, தொலைக்காட்சிப் பெட்டி, கணிணி, கைத்தொலைபேசி மற்றும் இல்லத்தரணியல் மின்விளக்குகள்…… இவ்வாறு நாம் பாரியளவிலான மின்காந்த அலைகளைப் பெறுகின்ற மூலாதாரமாக (source) இருக்கின்றோம்.

மற்றொரு வகையில் கூறுவதாயின், நாம் ஒவ்வொரு நாளும் மின்னேற்றப்படுகிறோம். இதனால் எமது உடலில் தலைவலி, உடல்வலி, சோம்பல் மற்றும் சோர்வுநிலை போன்ற குணங்குறிகள் தோன்றும். இதை ஆராய்ந்த மேலத்தேய விஞ்ஞானிகள் இதற்கான தீர்வைத் தேடலானார்கள்.

ஐரோப்பாவைச் சேர்ந்த (முஸ்லிமல்லாத) விஞ்ஞானி ஒருவரின் ஆராய்ச்சியிலிருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இவ்வகையான நேர் மின்னேற்றங்களிலிருந்து எம்மைக் காத்துக் கொள்வதற்கு சிறந்த தீர்வாக முன்வைக்கப்பட்டவை எமது ஈமானை மேலும் பலப்படுத்துவதாக அமைகின்றன. அவை:

எமது நெற்றியை ஒருதடவைக்கு மேல் பூமியில் படச் செய்வதன் மூலம் இம்மின்காந்த அலைகள் புவிக்கு கட்த்தப்படுவதால் நாம் அவ்வேற்றங்களை இழக்கிறோம்.

இந்த செயல்முறை, இடிதாங்கி மூலம் பெரிய கட்டிடங்களில் இடியால் உருவாகும் ஏற்றங்களை இழக்கச் செய்யும் ஏற்பாட்டைப் போன்றது. அல்லாஹு அக்பர்!

நெற்றியை மண்ணில் தொடச் செய்தல் மிகச்சிறந்து என்பதற்கு அப்பால் மேலும் மிகவுமே வியக்கச் செய்த விஷயம், நாம் புவியின் மத்தியை நோக்கியிருக்கும் நிலையில் நெற்றியைத் தரையிலிடும் போது மிகச்சிறப்பான முறையில், அதிகம் பயனளிக்க்கூடிய வகையில் மின்காந்த அலைகளை இழக்கச் செய்யமுடியும் என்பதாகும்.

மக்கா நகரம் புவியின் மத்தி என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதும் கஃபா மிகச் சரியாக ‘புவியின் மத்தி’ என்ற தகவலும் மேலும் எங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது.

ஆகவே தொழுகையில் ஸுஜூது செய்தல்………………..

Ø எமது உடலிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை இழக்கச் செய்வதற்கான மிகச் சிறந்த வழி.

Ø இந்த அகிலத்தைப் படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய மிகச் சிறந்த நிலை.

Ø அல்லாஹ் இடுகின்ற கட்டளைகள் எங்களுக்கு பயனுள்ளதாக, உதவக்கூடியதாக இருக்கும்.

இதுபோன்ற ஏராளமான இறைக்கட்டளைகள் இருக்கின்றன. ஆனால், எமக்கு அறிவின் தாத்பரியங்கள் தெரியாது. அவற்றை விரைவாகவோ, அல்லது காலங்கடந்தோ தெரிந்து கொள்ள முடியும்.

எந்தவோர் இறைக்கட்டளையாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் அதனை ஏற்று நடக்க வேண்டும். நாம் அல்லாஹ்வுக்காக எதைச் செய்தாலும் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் ஒருபோதும் மின்காந்த அலைகளை இழக்கச் செய்வதற்காக ஸுஜூது செய்வதில்லை. அல்லாஹ்வை கீழ்படிவதற்காகவே ஸுஜூது செய்கின்றோம். நாங்கள் அவனது கட்டளையில் ஏதோ ஒரு நுட்பமான, அறிவுப்பூர்வமான உண்மை இருப்பதாக பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றோம். ஏனெனில் அவன் எங்களது படைப்பாளன்; யாவற்றையும் அறிந்தவன்.

எவ்வாறாயினும், ஸுஜூது செய்வதிலுள்ள நலவுகள் உணமிப்படுத்தப்பட்டிருப்பதனால் விஞ்ஞான ரீதியாக நாம் இதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது அவசியம். ஏனெனில் முஸ்லிம்கள் என்ன செய்தாலும் அது அவர்களுக்கு பயனளிக்கும் என்பதை ஏனையோரும் கண்டுகொள்ள வேண்டும்.

ரிஃபா அஜ்மல், ரஜரட்ட மருத்துவபீடம்.

நன்றி : அல்ஹஸனாத் நவம்பர்-2009 மாத இதழ்.