08 ஜூலை 2014

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை...

வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்
''கடவுளே... இந்த வயசுல எனக்கு மார்பகப் புற்றுநோய் வரணுமா?'' என்று அடையாறைச் சேர்ந்த 86 வயது சாரதாப் பாட்டியின் வேதனை, மனதைப் பிசைகிறது.
14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்’ என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த வயதில் தாக்கும் என்று சொல்லக்கூட முடியாத நிலைதான் இன்று நீடிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.  
''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், மருந்துகள் வந்துவிட்டாலும், அதற்கான விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, இதைத் தீர்க்க முடியாத வியாதியாகவே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும்பட்சத்தில், குணப்படுத்துவது சாத்தியம். எளிய உணவுப்பழக்கத்தின் மூலமே இந்தக் கொடிய நோயை வராமல் தடுத்துவிட முடியும். வந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தியும் விடலாம். நம்முடைய உடலில் தினமும் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. இதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான், இந்தப் புற்றுநோய் செல் வளர்ச்சியடைந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்'' என்கிற சிவராமன், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.
அடர்நிறப் பழங்கள்
அடர் நிறப் பழங்களில் ஃப்ரீ ராடிகல்சை (Free radicals) வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்ப்பிள் நிறப் பழங்களில் 'அந்தோசைனின்’ (Anthocyanin) என்ற நிறமிச் சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.
பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், சீதாப் பழத்தின் ஒரு வகையான ராம் சீதா போன்ற பழங்கள், புற்றுநோயைத் தடுக்கவல்ல பழங்கள் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சிட்ரஸ் பழங்களில் நார்ச் சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
கருப்புத் திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள்
சிவப்புத் தக்காளி, கேரட், கரும்பச்சை இலைகளைக்கொண்ட காய்கறிகள், சில கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்வதுடன், புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்.
நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டுக்கும், புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகமான 'ரெட்டினாயிக் அமிலம்’ புற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.  
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி,  புற்றுநோயைத் தடுக்கும் 'லைகோபைன்’ (Lycopene) என்ற ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.
காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இன்டோல் 3 கார்பினால் (மிஸீபீஷீறீமீ 3 நீணீக்ஷீதீவீஸீஷீறீ) அதிகம் இருப்பதால், இந்தக் காய்கறிகள் சில வகை புற்றுநோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.
காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் வலுவடையும்.
மணமூட்டிகள்
இதில், மஞ்சள் தூளுக்குத்தான் முதல் இடம். இதில் உள்ள மூலக்கூறுகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப்பூ, கருஞ்சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை, வெந்தயம், இஞ்சி, மிளகு போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பூண்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட், டியூமர் செல்களை அழிப்பதுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கும்.
உணவுகள்
க்ரீன் டீயில் மிக அதிகமாக ஆன்டிஆக்சிடென்ட் கொழுப்பைக் கரைக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். தினமும் க்ரீன் டீயைக் குடிக்கலாம்.  
நட்ஸ் வகைகளில் வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா -3 இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.
சித்த மருத்துவத்தில் ஆடாதொடை இலை, தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. ரத்தத்தட்டுக்களை உயர்த்தக்கூடியவை. வீரியமிக்கது என்பதால், மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் வேதிப்பொருளான, 'டாக்சால்’ தாளித்தபத்ரி மூலிகை மரத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.
புற்றுநோயைக் கண்டு பதட்டமடையத் தேவை இல்லை. இன்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ சிகிச்சைபெற்று முழுமையாகக் குணம் அடைய முடியும். அதிலும், இயற்கையான உணவு, காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலுக்குள் புற்றீசல்போல் பரவிவரும் புற்று நோயையே வேரறுத்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் சிவராமன்.
எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க, உணவில் கூடுதல் கவனம் அவசியம் தேவை!
- ரேவதி,
படங்கள்: ர.சதானந்த், அ.ஜெஃப்ரிதேவ்,
மாடல்கள்: திவ்யதர்ஷினி, நிரஞ்சனா
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.
''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும்,பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு  விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், 'இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.
உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  
மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.    
பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.  
தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.  
காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

நன்றி : டாக்டர் விகடன்

வெண் தாமரைக் கற்பம் ( இதய நோயாளிகள் நலத்திற்கு )

பொதுவாக 30 வயதுக்கு மேல் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது சகஜம் .இந்த கெட்ட கொழுப்பை படியவிடாது கரைத்து எடுத்து வெளியே அனுப்புவதையும் ,நல்ல கொழுப்பை உடலில் நிலை நிறுத்தவும் வெண்தாமரைப் பொடி மிக,மிக நல்லது. நல்ல கொழுப்பு இதயத்தின் இயக்கத்திற்கு உயவு எண்ணெய் போல இன்றியமையாதது.
வெள்ளைத் தாமரைப்பூ 
ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பமும்போம்
கோர மருந்தின் கொடுமையறும் – பாருலகிற்
றண்டா மணத்தையுள்ள தாழ் குழலே காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்.
- குணபாடம் -
நாம் சாப்பிடும் அல்லோபதி மருந்துகள் ஈரலைத் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து ஒரு நாள் ஈரல் முழுவதும் கெட்டு , அதனால் உடலில் உள்ள ராஜ கருவிகள் (சிறு நீரகம் , மண்ணீரல் ,இதயம் ) அனைத்தும் கெட்டு மரணமும் அருகில் வந்துவிடுகிறது .
ஈரல் இல்லையென்றால் நம்மை ஒரு சாதாரணமாக இரு சக்கர வாகனப் புகையில் இருந்து வரும் விஷ வாயுக்களே சாகடிக்க போதுமானது.அந்தளவிற்கு முக்கியம் வாய்ந்த ஈரலை , ஒரு மாத்திரை போட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கொஞ்சம் , கொஞ்சமாக சாகடிக்கிறோம் . விளைவு ஈரல் தன் வேலையை சரியாக செய்ய முடியாத அளவிற்கு விஷமித்துவிடுகிறது.இந்த ஈரலில் சேர்ந்த விஷத்தை நீக்குவதில் வெண்தாமரைப் பொடி சிறந்தது.
நாம் இதயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை. இதயம் நின்றுவிட்டால் உயிர் உடனே போய்விடும் .ஆனால் ஈரலை முக்கால் வாசி வெட்டி எடுத்துவிட்டாலும் வளர்ந்து முழுதாகிவிடும்.அவ்வளவு சிறப்பை ஈரலுக்குக் கொடுத்திருக்கிறான் இறைவன் .ஆனால் இந்த ஈரல் இல்லையேல் ,இரத்தத்தில் விஷத்தன்மை உயர்ந்து இதயம் வெகு விரைவில் தன் பணியை முடித்துக் கொள்ளும்.
எனவேதான் கிராமத்தில் மனம் பொறுக்காத் விடயத்தை இப்படிக் கூறுவார்கள் ///என் ஈரக் கொலையே நடுங்கீருச்சு///.ஈரல் கெட்டுவிட்டால் காரணமற்ற மனவருத்தத்தை கொடுக்கும். தூக்கத்தில் பயங்கர கனவு ( TREMORS ) கண்டு விழித் தெழுவது ஆகியவை நடக்கும் .
ஈரலைப் பற்றி மேலேறி இதயத்தை தாக்குகின்ற உஷ்ணத்தையும் ,அந்த உஷ்ணத்தினால் அபான வாயு சூடாகி விரிவடைந்து இதயத்தை தாக்கும் .இதற்கு தமரக வாய்வு ( HEART ATTACK ) என்று பெயர் .இந்த சூட்டைத் தணித்து தமரக வாயுவால் ஏற்படும் இதயத் தாக்குதலை தடுக்க 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே வெண்தாமரைப் பொடி, வருடத்திற்கு 48 நாட்கள் தேனில் குழைத்து சாப்பிட்டு வர மேற்கண்ட பிரச்சினைகள் அகலும் . மேலும் பல நோய்கள் அண்டாமல் தடுக்கும்.
-மச்சமுனி -

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)
நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.
நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)
நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் - குறைந்தது 12 குவளை.
நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.
நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.
தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!
மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.
"இந்த டயட்டை உணவுக்கு முன்னர் பின்பற்றுவதா அல்லது உணவுக்குப் பின்னர் பின்பற்றுவதா?" என்ற கேள்வி யாருக்காவது எழுந்தால் அத்தகையோர் மட்டும் இச்சந்தேகம் தீரும்வரை இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.
- குடும்ப நல ஆலோசகர் மதி

05 ஜூலை 2014

அல்சரை தவிர்க்க.........!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!மேலும் தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது.
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!