10 அக்டோபர் 2013

ஆண்மையும், மாரடைப்பும்...

ஒரு ஆணுக்கு ஆண்மையை கொடுக்கும் ஹார்மோன் டெஸ்ட்ரோஜன். அவனுக்கு உடல் வலிமையையும் அதுதான் கொடுக்கிறது. மிகுந்த உடல் வலிமை, நீண்ட காலம் வரை இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகியவை ஆண்களுக்கு கிடைத்த பலம். பெண்களுக்கு அவை இல்லை.

ஆனால் குறைந்த ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை ஆண்களின் 2 பெரிய பலவீனங்கள். டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆணுக்கு உடல் வலிமையை கொடுக்கும் அதே நேரம் இருதயத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரத்தக்குழாய்களிலும் அடைப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளை உருவாக்கி விடுகிறது.

எச்.டி.எல். என்ற அதிக திறனுடைய லிப்போ புரதம், கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து கல்லீரலையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மனித ரத்தத்தில் இந்த லிப்போ புரதத்தை உண்டாக்க உதவும் ஒரு தூண்டு சக்தி டெஸ்ட்ரோஜனுக்கு இல்லை. மாறாக இந்த தூண்டும் திறன் பெண்களுக்கு பெண்மையைத்தரும் ஈஸ்ட்ரோஜனுக்கு உண்டு. இதனால்தான் மாரடைப்பு என்ற பேரிழப்பு ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தமும், கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பும் பெண்களுக்கு மிகவும் குறைவு.

உடல் வலிமை என்பதும் எதிர்ப்பு சக்தி என்பதும் வேறுபட்டவை. வலிமை என்பது ஆண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்த வரப்பிரசாதம்.

தற்போது உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் கொழுப்பு சக்தி அதிகமாக உடலில் சேர்ந்து மாரடைப்பு வருவதற்காக வாய்ப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு வரும் வாய்ப்பு இயற்கையாகவே ஆண்களுக்கு அதிகம் இருப்பதால்தான், நாள்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அத்துடன் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இது மாரடைப்பில் இருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.


09 அக்டோபர் 2013

இனிப்பான செய்தி!

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.பதார்த்தத்தில்தான் என்றில்லைசீனியை அப்படியே அள்ளியும்சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தைநீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட ாட்டீர்கள்.
குறிப்பாகவெள்ளைச் சீனியைத் யார் செய்ய என்னென்ன ரசயானப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. 
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் வுடர் அல்லதுகுளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாகபயன்படுத்துகிறார்கள்.

2. 
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட்லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறதுஇந்த இடத்தில்இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. 
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 தவிகிதம் என்கிற அளவில் சேர்த்துசல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 
சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களைஇழந்துசெயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாகசேர்ந்துவிடுகிறது.

5. 
அடுத்துபாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண்சக்கைபோன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. 
சுடுகலனில் காஸ்டிக் சோடாாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி ிகுந்தஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. 
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும்சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறதுசல்பர் டை ஆக்சைடு ஞ்சுசீனியில் கலந்துவிடுகிறது.

8. 
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளைசாப்பிடக்கூடாதுகாரணம்அதில் ள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும்ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்லபல் வலிபல சூத்தைகுடல்புண்சளித்தொல்லை,உடல்பருமன்இதய நோய் மற்றும் சீனி வியாதிஇரத்த அழுத்தம் போன்றபெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாகஅமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம்பனங்கட்டிநாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும்ாப்பிடலாம்இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோஇதய நோயோ,சர்க்கரை வியாதியோ வராது.
Thanks  to Kaja MagdoomAnnamalai University