25 ஜனவரி 2012

நபி மருத்துவத்தில் பழவகைகள்

நோய் தீர்க்கும் திராட்சை
பழங்களிலே மிகவும் சிறந்த பழங்கள் திராட்சைபழம்,அத்திப்பழம், பேரிச்சம்பழம் ஆகிய மூன்று பழங்கள் என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்.திராட்சைபழத்தை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் என அபுநயீம் அவர்கள் தமது மருத்துவ நூலில் கூறுகிறார்.
ஹளரத் இப்னு அப்பாஸ் "பழத்தை உண்ணுங்கள் அதன் கோட்டையை வீசி எரிந்து விடுங்கள்" ஏனெனில் திராட்சைப்பழம் நோய் நிவாரணியாகும்,அதன் கோட்டை நோயாகும் ,என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக திப்பநபவி அறிவிக்கிறது.நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பழச்சாறு விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்.
இன்று சுவிட்சர்லாந்து .ஐரோப்பிய நாட்கள்,இந்தியா இங்கெல்லாம் பழச்சாறு அருந்தும் முறை{juice- Therapy} பிரபலமடைந்து வருகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்புதான் டாக்டர் லேம்ப் {Lambe} என்பவர் இங்கிலாந்தில் முதல் முறையாக திராட்சை பழச்சாறு மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தார்.
திராட்சை பழத்தில் மட்டும் 300 வகை இருப்பதாக சொல்கிறார்கள்.இந்தியாவில் கிடைப்பவை பன்னீர் திராட்சை,கோட்டை இல்லாத திராட்சை,ஆஸ்திரேலியா திராட்சை,பச்சை திராட்சை,ஐதராபாத் திராட்சை ,ஆங்கூர் திராட்சை ஆகும்.
அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள் பச்சை திராட்சை ஒரு அவுன்ஸ் பகல் சாப்பாட்டுக்கு பின்பு சாப்பிட்டு வர 21 நாளில் தலைவலி குணமாகும்.இதே அளவு ஜூஸ் காலை உணவுக்குப்பின் சாப்பிட இதய வீக்கம் குறையும்.ஐந்து நாட்கள் சாப்பிட்டால் வாய்,நாக்கு புண் குணமாகும்.
சிலருக்கு மனதில் இனம் புரியாத :திகில்" பயம் ஏற்ப்படும்.இதையம் படபடக்கும்.கைகால் நடுங்கும்.இவர்கள் பகல் உணவுக்குபின் திராட்சை சாறு ஒரு அவுன்ஸ் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தைரியம் ,சுறுசுறுப்பு உண்டாகிவிடும்.
குழந்தைகளுக்கு ஏற்ப்படும் மலச்சிக்கல் தீர திராட்சை ஜூஸ் இரண்டு டீஸ்பூன் அளவு காலை மாலை மூன்று நாள் கொடுத்தால் மலச்சிக்கல் மறைந்து விடும்.
பெண்களுக்கு ஏற்ப்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கு தீர தினம் ஒரு அவுன்ஸ் திராட்சை ஜூஸ் காலை மாலை இருவேளை ஒரு மாதம் குடித்தால் சீராகும்.
புற்று நோயை குனபடுத்திய திராட்சை ஜூஸ்:{Grape Care For Cancer}
திராட்சை பழச்சாறு பற்றிய மகிமையை பார்த்தோம். இதன் மருத்துவ மகிமைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளன.திராட்சை பழச்சாறு புற்று நோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
திருமதி ஜானாபிரண்டிட் {Johanna brandit} என்பவர் பல வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.திராட்சை பழச்சாறு சாப்பிட்டதால் குணமடைந்திருக்கிறார் என்ற செய்தி நிரூபிக்கப் பட்டுள்ளது.
அவரின் இளமைக்காலத்தில் திடீர் என கடுமையான வயிற்று வழியால் பாதிக்கப் பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார் ஒன்றும் பலனலிக்கவில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்டபின் அவருக்கு வயிற்றில் புற்று நோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை ,ரேடியோ கதிர் சிகிச்சை செய்ய சொன்னார்கள்.. இவாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு ஒரு நோயாளியை இவர் பார்த்ததால் அந்த சிகிச்சை தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டார். பின்பு நோன்பு மருத்துவம் பற்றி {அப்டன்சின்கிளிஎர் {Uptonsinclair} எழுதிய நூலைப்படித்து அதன்படி செய்து பார்த்தார்,பலன் இல்லை.மீண்டும் 9 வருடங்கள் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கட்டி இரண்டாக வளைந்திருந்தது.இந்தமுறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேசன் செய்ய மறுத்தார்.
பின்பு அவர் திராட்சை பழச்சாறு மட்டும் அருந்தி நோன்பிருந்து வந்தார். என்ன ஆச்சரியம் அவருடைய வயிற்றில் உள்ள வலி ஒரு வாரத்தில் மறைந்து ஆறு வாரத்திற்குள் கட்டிகள் அமுக்கப் பட்டிருந்தது.பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தலில் கட்டிகள் ஏதும் காணப் படாததால் டாக்டர்கள் இதை நம்ப மறுத்தனர். பின்பு நம்பினார்.
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த திராட்சை சிகிச்சை பழச்சாறு வெற்றி அளித்தது.இவருடைய உண்மை நிகழ்ச்சியை "நோய் தீர்க்கும் திராட்சை"என்று எழுதி வெளியிட்டனர்.பல பதிப்புகள் வந்து விற்பனையாகியது.
திராட்சை ஜூஸ் பற்றி மேலும் விபரம் அறிய விரும்புபவர்கள் இந்தியாவில் பூனாவில் உள்ள உருளிகான்சான்{Urulikanchan} இயற்க்கை மருத்துவ மையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதி இதனைப் பற்றிய தகவல் பெறலாம்..இங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு திராட்சை பழச்சாறு மருத்துவம் தினமும் அளிக்கப் படுகிறது.
திருக்குர்ஆன் சொன்ன பழச்சாறு மருத்துவத்தை இன்று நோய் நோய் தீர்க்க மருத்துவ ரீதியாக நிரூபித்து வருகிறார்கள். பழச்சாறு அருந்துவதன் மூலம் அனேக நோய்களிடமிருந்து விடுதலை அடியலாம்.நோய்கள் வராமலும் ,உடல் ஆரோக்கிய வழியில் பாதுகாத்துக் கொள்ளலாம் என நிரூபிக்கப் பட்டுள்ளது.....எனவே நாமும் நம் வாழ்வில் நம் திருக்குர்ஆன் கூறியது போன்று ஜூஸ் அருந்தி நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்து..எந்த விதமான கொடிய நோய்கள் ஆபத்துக்களை விட்டும் பாது காத்து கொள்வோமாக.. வள நாயனும் துணை புரிவானாக ஆமீன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக