12 ஜனவரி 2013

தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள்:-

இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.

ஆடுதொடா இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு, தேமல் இருக்குமிடத்தில் தடவினால், தேமல் இல்லாமல் போய்விடும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து, இந்தக் கலவையை தேமல் உள்ள இடத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

ஒரு துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.


தேமல் உள்ளவர்கள் இவற்றை செய்து வந்தால், அவர்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக