07 மார்ச் 2012

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை ஏற்படும் மாற்றங் களை மருத்துவ ரீதியாக பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பெண்களின் உடலியல் ரீதியாக மெனார்க்கே (Menarche) வில் தொடங்கி. மெனோபாஸ் (Menopause)வரை ஏற்படும் மாற்றங்கள் இயற்கை வழங்கியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாராலும் மறுக்க இயலாது. மெனோர்கேயையும், மெனோபாசை யும் மருத்துவத்தால் உண்டாக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் இதன் இடைபட்ட காலத்தில் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும்.

இந்த காலகட்டத்தில் தான் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட் ரோன், இன்சுலின், வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் ஆகியவை சுரக் கின்றன. இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக் கிறார்கள். 

இதன் விளைவாக எலும்புகளின் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சி, தசைகளின் வளர்ச்சி, இதயத்திற்கான சீரான இரத்த ஓட்டம் ஆகியவை சாத்தியப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் போது அதாவது மெனோபாஸ் ஏற்படும்போது, இந்த ஹார்மோன்கள் தங்களின் சுரப்பை குறைத்துகொள்வதால் சமச்சீரற்ற தன்மை ஏற்படு கிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், பிறப்பு உறுப்புகளில் வெள்ளைப்படுதல், இரத்தம் கசிதல், எலும்பு தேய்மானம், இருதய கோளாறு, இரத்த சோகை, புற்று நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை எப்படி உணர்ந்து கொள்ளலாம்?

தலைவலி, முகம் சிவத்தல், உடல் வலி, மல சிக்கல், எடை திடீரென்று அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், தூக்கமின்மை, பசியின்மை, மன அழுத்தம், மன நிலையில் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்போது மாதவிடாய் நிறுத்தத்தை உணர்ந்து கொள்ளலாம். மாதவிடாய் தள்ளிப்போகுதல், ரத்த போக்கு, இரத்த சோகை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மெனோபாஸ் உறுதிசெய்யப்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதால் தான் புற்று நோய் வருகிறது என்கிற நம்பிக்கை சரிதானா?

பெரும்பாலான ஆய்வின் முடிவில் இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்தின் போது, வயதின் காரணத் தினாலும், ஈஸ்ட்ரோஜன் என்கிற சுரப்பியின் சமச்சீரற்ற தன்மை யினாலும் பெண்களுக்கு மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகி றது. இதனை சி ஏ 125 போன்ற நவீன பரிசோதனை மூலமும் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம்.

மெனோர்க்கே மற்றும் மெனோபாஸ் ஆகிய இரு நிலைக்களுக்கிடையே நிகழும் முக்கிய நிகழ்வு கருமுட்டை உற்பத்தி. இதனை செயற்கையாக உருவாக்க இயலுமா?

இயலாது. ஆனால் கரு முட்டையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்குரிய சிகிச்சை மூலம் குறைபாட்டை களைந்து, கரு வை உற்பத்தி செய்தற்குரிய தகுதியான முட்டையாக உருவாக்கலாம்.

மெனோபாசிற்கு பிறகு பெண்கள் உள்ளாகும் மனநோய்க்கு உளவியல் ரீதியாக தீர்வு காண்பது நல்ல பலனைத் தருமா? அல்லது மருத்துவத்துடன் கூடிய சிகிச்சை மூலம் பலன் பெறுவது நலமா?

இதற்கான மருந்துகளும், மாத்திரைகளும் தற்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இருப்பினும் மெனோபாசிற்கு பிறகு அவர்களுக்குரிய கவுன்சிலிங் வழங்குவதன் மூலமே முழுமையான தீர்வை காண இயலும்

காலங்கடந்து அதாவது மெனோபாஸ் ஆனபிறகு தன்னால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா?

மெனோபாஸ் ஆகிவிட்டது என்றால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அந்த பெண் சற்று முன்கூட்டியே சிந்தித்திருந்தால் அவரது கரு முட்டை யை, அதற்குரிய வங்கி மூலம் சேமித்து வைத்திருந்தால் சாத்தியப்பட்டிருக்கும்.

தகவல்: திண்டுக்கல் ஹில்லாக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் மீனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக