07 மார்ச் 2012

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்

தாய்க்கும் சேய்க்கும் பிரிக்க முடியாத பினைப்பை ஏற்படுத்துவது தாய்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர்ரத்த அழுத்தம்

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தநோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

அழகு பாதிக்காது

நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை இன்றைய பல இளம் தாய்மார்களிடம் உள்ளது. இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் 6 மாதம் வரை தாய்பால் கொடுத்தால் டயாரியா, தொற்று நோய்கள் எதுவும் குழந்தையை தாக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆறுமாதம் அவசியம்

எனவே, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் இளம் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

எனவே தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் தாய்ப்பாலை கொடுக்க தாய்மார்கள் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக